July 18, 2020
தண்டோரா குழு
கோவையில் கடந்த 5 நாட்களில் 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று 118 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1905 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனால் கோவையில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் இன்று 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1169 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில் கோவையில் கடந்த
செவ்வாய்கிழமை188 பேர்,புதன் கழமை104 பேர், வியாழக்கிழமை 44 பேர்,வெள்ளிகிழமை 141 பேர்,இன்று சனிக்கிழமை 118 பேர் என
ஐந்து நாட்களில் 595 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.