• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடத்தில் வியாபாரி போல் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

July 18, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் அருகே வியாபாரி போல் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி, சத்தம் போட்டதால் பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை உக்கடம் அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் நிஜாம். பிளக்ஸ் டிசைன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிஜாம் வீட்டின் அருகே புர்கா (இஸ்லாம் பெண்கள் ஆடை)விற்பனை செய்ய மர்ம நபர் ஒருவர் வந்ததாக தெரிகிறது.நிஜாமின் மனைவியிடம் பேச்சு கொடுத்தவாறு திடிரென கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.அப்போது துதாரித்துக்கொண்ட அவர் செயினை பிடித்தவாறு சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அந்த மர்ம நபர் வைத்திருந்த ஆயுதத்தால் பெண்ணை தாக்கி உள்ளார். இதனிடையே அங்கிருந்தவர்கள் ஓடி வந்ததால் , நிஜாமின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பின் வாசல் வழியே தப்பியோடியுள்ளார். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக உக்கடம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க