• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று

June 22, 2020 தண்டோரா குழு

கோவையில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் சூழலில் மருத்துவத் துறையினர் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.கோவையை பொருத்தவரையில் கடந்த ஜூன் முதல் வாரத்திலிருந்து மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில்
கோவையில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத் துறை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பணியில் இருந்ததால்,வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க