• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

June 22, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மளிகை பொருட்கள் மொத்த விற்பனை நிறுவனங்கள் அதிகம் உள்ள ரங்கே கவுடர் வீதியில் தூய்மைப் பணியாளர்கள் கிருநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க