• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜீசஸ் ஒரு தமிழர் என்ற புத்தகத்தால் சர்ச்சை.

March 1, 2016

கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து பிறப்பால் தமிழர் எனவும் அவர் மரவேலை செய்துவந்த ஐயர் எனவும் கூறப்பட்டுள்ள புத்தகம் விரைவில் மராட்டி மொழியில் வெளியிடப்பட உள்ளதால் இந்தியாவில் ஒரு இறுக்கமான சூழல் உருவாகியுள்ளது.

சாவர்கர் நேசனல் மெமோரியல் என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர்கள் எழுதிவைத்து கொள்கை கோட்பாடுகள் குறித்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது. இந்த அமைப்பு வரும் 26ம் தேதி ச்ரைஸ்ட் பரீச்சை என்ற ஒரு நூலை மராட்டி மொழியில் வெளியிட உள்ளது.

அதில் இயேசு கிறிஸ்து தமிழகத்தைச் சேர்ந்தவர் அவரது இயற்பெயர் கேசவ் கிருஷ்ணா எனவும் அவர் அனைத்துத் தமிழ் இந்துக்களைப் போல கருப்பு நிறம் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் பிறப்பால் விஸ்வகர்மா பிராமணர் ஜாதியில் பிறந்தாலும் தச்சுத்தொழிலை செய்து வந்ததால் ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவராக கருதப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 12 வயதில் பூணூல் போடப்பட்டது எனவும் அவரது தந்தையின் பெயரான சேசப்பன் தான் பிற்காலத்தில் மருவி ஜோசப் ஆனது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நில்லாமல் அரபு மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் தமிழின் ஆதிக்கம் இருந்ததால் அங்கிருந்து இங்கு வந்து தியானம் கற்றுக்கொள்ள வந்ததாகவும் வந்த இடத்தில் இமயமலையில் சென்று ஈசனை நோக்கி கடும் தவம் செய்ததால் அவருக்குச் சிவன் காட்சியளித்து முக்தியளித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தியான வலிமையாலேயே சிலுவையில் அறைந்த பிறகும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்து பின்னர் சீடர்கள் அவரைக் கண்டெடுத்து சித்த மருத்துவம் மூலம் குணமையச் செய்தார்கள் எனவும் பின்னர் அங்கிருந்து வந்த அவர் இமயமலையில் கடும் தவம் செய்து பின்னர் பூதஉடல் சமாதியானது எனவும் கூறப்பட்டுள்ளது.

தியானம் செய்த மூன்று ஆண்டுகள் அவரை அங்கு இருந்த சீடர்கள் ஈஷாநாத் எனவே அழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இது தற்போதுதான் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது எனவும் இது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளதால் தற்போது பெரிய அளவில் சர்ச்சைகள் இருக்காது எனவும் சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல்தலைவர் ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடைய இது குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மத தலைவர்கள், இது யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை எனவே இது கிறிஸ்துவர்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க