• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா போராளிகளுடன் ஈகைத் திருநாள் கொண்டாட்டம் !

May 26, 2020 தண்டோரா குழு

கொரோனா நோயினை எதிர்த்து தங்கள் பாதுகாப்பையும் துச்சமாய் நினைத்து போராடிவரும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கை துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் பிரியாணி உணவு வழங்கி நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI மருத்துவமனையின் டீன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இந்த கொடிய நோயினை எதிர்த்து உயிர்காக்கும் உன்னதப்பணியை செய்து வருவதற்காக அவர்களுக்கு நன்றிகளையும், தொடர் ஆதரவும்
தெரிவிக்கப்பட்டது. அதனுடன் ESI மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மாநகரச் செயலளார் M.S. சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் துறை செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வினை கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவைப் பிரிவின் சார்பாக அதன் செயலாளர் முஹம்மது ஹக்கிம் மற்றும் சமீர் ஆகியோர் ஒருங்கினைத்தனர்.

மேலும் படிக்க