• Download mobile app
08 Jun 2026, MondayEdition - 3771
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மியான்மரில் பச்சை மாணிக்கக் கற்பாறை கண்டுபிடிப்பு !

October 17, 2016 தண்டோரா குழு

மியான்மர் நாட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் சுமார் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கற்பாறையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1,100 கோடி என்று கூறப்படுகிறது.

மியான்மரில் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் நிலத்தில் தோண்டியபோது, அங்கு, உலகின் மிக விலை உயர்ந்த கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல்லைக் கண்டனர். அக்கல்லின் எடை சுமார் 175 டன் என்றும் அதனுடைய மதிப்பு சுமார் ரூ. 1100 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மெருகேற்றப்படாத அந்தக் கல்லை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே அந்த விலையுயர்ந்த கல்லைக் கொண்டு ஆபரணங்கள் செய்யவும், கத்திகள், கோடாரிகள், வெட்டும் கருவிகளைச் செய்யலாம்.

மேலும், மியான்மர் அரசுக்கு அந்த மாணிக்கக் கற்களுக்கான உரிய விலையை சீனா வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர். பச்சை மாணிக்கக் கற்களை விற்பதன் மூலம் மியான்மரின் மொத்த வருவாய் ஈடு செய்யப்படுகிறது.

இந்த மாணிக்கக் கல்லைத் தோண்டி வெளியே எடுத்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாகத் தோண்டி எடுக்கப்பட்ட கற்பாறை அரசுக்குச் சொந்தம் என்பதால், தொழிலாளர்களுக்கு அரசு சன்மானம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க