• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்து போன மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த முதியவர்

October 13, 2016 தண்டோரா குழு

புதுடில்லியை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் இறந்து போன தன் மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

டெல்லியில் அருகே கால்காஜி என்னும் பகுதியில் கோவிந்த்ராம் என்பவர் அவருடைய மனைவி கோபியுடன் வசித்து வந்தார்.சில நாட்களுக்கு பிறகு அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்ததையும்,அவ்வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை கண்ட அருகில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் உடனே அங்கு வந்து பார்த்தபோது, ராம் படுக்கையில் இருந்ததையும் அவருடைய மனைவியின் மரித்த உடல் அழுகிய நிலையில் கீழே இருந்ததையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அந்த வீடு சரியாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தன் இறந்த மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மனைவியின் இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும்,அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தான் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க