• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில் ? – தோனி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி

January 25, 2020 தண்டோரா குழு

வருகிற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையில், விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க