• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

October 12, 2016 தண்டோரா குழு

ஆயுதங்களுடன் பூஜை நடத்திய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது இரு பிரிவுகளின் கீழ் கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை உக்கடம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டார். அதில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விகாரத்தில் பல்வேறு தரப்பினர் காவல்துறையிடம் இந்து மக்கள் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யுமாறு புகார் அளித்தனர்.

பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகாரையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் மீது IPC153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல் , 25(1)(a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க