• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜுன் சம்பத் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புகார்

October 12, 2016 தண்டோரா குழு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை உக்கடம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய புகை படத்தை முகநூலில் வெளியிட்டார். அதில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் கோவை மாவட்ட அனைத்து ஜாமத், இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் ஏ.ஆர் காவலர்கள் பயன்படுத்தும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி மற்றும் ஏர்கன் துப்பாக்கிகள் தனி நபரிடம் எப்படி வந்தது. இந்த துப்பாக்கிகள் ஆயுத தடை சட்டத்தில் உள்ள ஆயுதங்கள், மக்களை அச்சுறுத்தும் வகையிலான துப்பாக்கியை வைத்துள்ளதால் ஆயுத தடை சட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில்,எனது மகன் ரைப்பில் கிளப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறான். அவன் பயன்படுத்தும் ஆபத்தில்லாத டம்மி துப்பாக்கிகள் தான் ஆயுத பூஜை அன்று வைக்கப்பட்டது என்றும் என் மீது திட்டமிட்டு பழி சுமத்துகின்றனர் என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க