• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

December 11, 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்து, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை காவல் துறையினர் தாக்கி பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க