November 28, 2019
தண்டோரா குழு
தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும் முன், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
மேலும், தொகுதிகளை மறு வரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது எனவும், மறுவரையறை செய்த பிறகே தேர்தல் நடத்த அனுமதிக்கவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.