• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குண்டு வெடிப்பு கைதி – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

October 7, 2016 தண்டோரா குழு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹாருண் பாட்ஷா என்பவர் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 1998 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ஹாருண் பாட்ஷா. கோவை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே குண்டு வெடிப்பு வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்ற கைதி அப்துல் ஒசீர் என்பவர் நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கு சிறை துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு தான் காரணம், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம்முன் அன்சாரி நேற்று கோவை மத்திய சிறையில் கைதிகளை சந்தித்த அவர் ஆயுள்தண்டனை கைதிகளுக்கு மன அழுத்தம் தீர சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹாருண் பாட்ஷா என்பவர் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கைதிகளின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை உருவாகாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.

மேலும் படிக்க