September 10, 2019
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் போது மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.