• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா ஒரு போட்டோ எடுக்கலாமா – இளம் நடிகருடன் விஜய் எடுத்த செல்பி

September 9, 2019 தண்டோரா குழு

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதற்கிடையில், மெர்சல் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் நடிகர் அப்துல் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து நடிகர் அப்துல், ‘நான் விஜய்யின் கேரவன் பக்கத்தில் நின்றிருந்தேன், அவர் கேரவனில் இருந்து இறங்கி வந்து காரில் ஏறிச் சென்றார். சில தூரம் சென்ற பிறகு அவர் காரை நிறுத்திவிட்டு என்னை அழைத்தார். என்ன ஆச்சு, எதுவும் கேட்கனுமா இல்ல சொல்லனுமா என்று என்னிடம் கேட்டார். நான் உங்க கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு சொன்னேன். அதற்கு அவர் படமே நடிச்சாச்சு அப்புறம் என்ன என்று கேட்டார். அதற்கு நான் இல்ல அண்ணா கெட் அப்-ல இருக்கு என்றேன். பிறகு எனக்காக கிழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க