பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பரிமிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அடுத்தடுத்த விகேட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் (144) அபார சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேர்ன்ஸ் (133) சதத்தால் 374 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஸ்மித் (142), மேத்யூ வடே (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 487 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு