• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத்

October 1, 2016 தண்டோரா குழு

மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் பைசாலாபாத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் உண்மையான சர்ஜிக்கல் ஆப்ரேஷன் என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பைசாலாபாத்தில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத், உண்மையான சர்ஜிக்கல் ஆப்ரேஷன் என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என தெரிவித்துள்ளார். சர்ஜிக்கல் ஆப்ரேஷனின் உண்மையான பொருள் என்ன என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தெரிந்துக் கொள்ள செய்வோம், பதிலடி கொடுப்போம் என்று பேசி உள்ளார்.

மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி சர்ஜிக்கல் ஆப்ரேஷன் நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.அமெரிக்காவால் கூட உங்களை காப்பாற்ற முடியாது. இப்போது பாகிஸ்தானின் முறை, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றார்.

மேலும் படிக்க