• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது

October 1, 2016 தண்டோரா குழு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதை ஏற்க மறுத்த அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனியார் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தாவை 5 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழுவில் நியமித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே. குப்தா, வினோத் உள்பட 5 பேர் பரிசோதனை செய்கின்றனர். மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம், வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் உள்ளனர். மேலும் நீதிபதி தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

மேலும் படிக்க