• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் சொன்னது சரித்திர உண்மை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – கமல்

May 15, 2019 தண்டோரா குழு

நான் சொன்னது சரித்திர உண்மை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சை கருத்துக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்.சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை.கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை.யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்.

உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும்.மதச் செருக்கு , சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது ; நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க