• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எட்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் – முதல் படத்திலேயே சாதனை படைத்த பிரித்வி ராஜ்

April 10, 2019 தண்டோரா குழு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன்,பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரைக்கு வந்து எட்டே நாளில் உலகம் முழுவதிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து லூசிபர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் ரூ. 3.48 கோடி, லண்டனில் 2.30 கோடி என பல்வேறு நாடுகளில் மொத்தம் 44 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக லூசிபர் படக்குழு பெருமிதம் கொள்கின்றனர். இளம் இயக்குனரான நடிகர் பிருத்விராஜ் எடுத்துள்ள திரைப்படம் செய்துள்ள சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க