• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

March 20, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், அசௌகரியம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் கட்டப்பட்ட இரு சக்கர வாகனம் ரேஸ் கோர்ஸ், சுங்கம் என நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

முன்னதாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் இராசாமணி துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். நேற்றைய தினம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் கோவையில் துவங்கப்பட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், மால்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகரில் பிரசார வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க