• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல மூதாட்டி அடித்து கொலை

March 19, 2019 தண்டோரா குழு

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியை அடுத்த அன்னை வேளாங்கண்ணி நகரில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஒரு ஆண் , மற்றும் ஒரு பெண் என இருவர் அவரது வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு உள்ளதா என்பதை கேட்டு உள்ளனர். பிறகு திடீரென அவரை தாக்கி அவர் அணிந்து இருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அருகில் இருந்தவர்கள் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மேரி ஏஞ்சலின் கிடந்து உள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க