• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி விவகாரம்: கண்ணில் கருப்பு துணி கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் கைது

March 18, 2019

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்த ரஜினி தேவராஜன் என்பவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை எனவும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள சூழலில் அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து பிரச்சார போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க