• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்!” – பிரதமர் மோடி அறிவிப்பு

March 6, 2019 தண்டோரா குழு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தார். பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ் மொழி உலகத்தில் உள்ள மொழிகளில் சிறந்தது. மத்திய அரசு தமிழகத்தில் முனனேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது. தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஜெயலலிதா கனவு கொண்டது போல், வளர்ச்சி மிக்க தமிழகத்தை உருவாகுவோம். எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களுக்கு பாடுபட்டவர். ஆகவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் அழைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க