• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை; பழரசம் மட்டுமே அருந்தினார் – அப்பல்லோ நிர்வாகம்!

March 5, 2019 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார் என அப்பல்லோ மருத்துவமனை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரின் மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.ம் இதனை தொடந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான செலவின விவரங்களை கடந்தாண்டு வெளியிட்டது. அதில், அவர் அப்போலோ மருத்துவனையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு மட்டும் பானங்களுக்கான தொகையாக ரூ. 1 கோடியே 15 லட்சம் என ரசீது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சிகிச்சையின் போது பழரசம் மட்டுமே அருந்தினார் என்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள், மற்றும் போலீசார் என பலருக்கும் உணவு வழங்கியதால் தான் கட்டணம் ரூ.1.15 கோடி ஆனது என உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க