சென்னையில் 65 வயது மூதாட்டியை 3 சிறுவர்கள் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடிசைப் பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு முதாட்டி தூங்கிக்கொண்டிருக்கும் போது கஞ்சா போதையில் 3 சிறுவர்கள் அந்த குடிசைக்குள் நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்த போது அவர்களை அந்த சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதனை அடுத்து கத்தி முனையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 3 பேரில் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.விசாரணையில் அவன் எழில்நகரை சேர்ந்தவன் என்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்