• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரு நாடுகளுக்கிடையே போராக மாறக்கூடாது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் – தொல் திருமாவளவன்

February 27, 2019 தண்டோரா குழு

இரு நாடுகளுக்கிடையே போராக மாறக்கூடாது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது புல்வமா தாக்குதலை அடுத்து இந்திய விமான படையினர் பதிலடித்த தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் ஆறுதல் அளிக்கிறது என்றாலும் இருநாடுகளுக்கிடையே போர் மூளூம் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உள்ள சூழலையை இந்தியா தவிர்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும், இது நாடுகளுக்கிடையேயான போராக மாற கூடாது. அதை தடுப்பதற்கு தவிர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், திமுக கூட்டணியில் முதல்கட்டமாக போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை வழங்கி இருப்பதாகவும், உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டும் எனவும் தெரிவித்தார் .திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக,இணக்கமாக வெற்றிகரமாக நிறைவேறும் என தெரிவித்த அவர்,காங்கிரஸ் மற்றும் இருங்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு நடந்துள்ளது எனவும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க