February 26, 2019
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் செய்தி சேனலில் வரும் பிரேக்கிங் செய்திகளால் சீரியல்களில் இருந்து செய்தி தொலைக்காட்சிகளுக்கு மக்களின் கவனம் திரும்பியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தனியார் கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கக் கோரி முகமது ரஃபீக் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அப்போது தமிழ்நாட்டில் செய்தி சேனலில் வரும் பிரேக்கிங் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளது. பெண்கள் சீரியல்களை தவிர்த்து, செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர். பொதுமக்களின் மனம் மாசுபடாமல் இருக்க செய்தி தொலைக்காட்சிகள் துணையாக இருக்கின்றன என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் டிராய், மத்திய ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரும் மார்ச் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.