• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகிலன் விவகாரத்தில் முதல்வர் கடமை தவறி பேசுகிறார் – முத்தரசன்

February 26, 2019 தண்டோரா குழு

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போனது தொடர்பாக முதல்வரின் பேட்டி வேடிக்கையாக, விந்தையாக இருப்பதுடன், கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பல்வேறு பிரச்னைகளில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட முகிலன், குறிப்பாக ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்மந்தமாக துல்லியமான தகவலை தந்த பிறகு காணாமல்போய் ஒரு வாரமான நிலையில், அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு, கடமை உள்ளது என்பதை தவறி முதல்வர் பேசி வருகிறார். விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதையும், பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவிக்கக்கூடாது.

முன்னதாக, கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டவர், மிகப்பெரிய அரசியல் போராட்டத்தை நடத்தக்கூடிய தேர்தலாக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். 100 நாட்களில் கருப்புப்பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடிமகனின் 15 லட்சம் வங்கியில் செலுத்தப்படும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை அமல்படுத்தப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கடந்த 5ஆண்டுகளில் நிறைவேற்றாததுடன், அதைப்பற்றி பிரதமர் மோடி பேச மறுக்கிறார். காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைபாடு, சட்டப்பூர்வமாக தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் இருப்பது, இயற்கை பேரிடரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் தமிழகம் கேட்ட நிதியை தராமல், ஜி.எஸ்.டி.யால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது தமிழகம் ஆகியவையால் தமிழக மக்கள் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

மாநில நலன்களுக்கு எதிராக செயல்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் இருப்பினும் ஆளுநர் மூலமாக நேரடியாக மத்திய அரசு நடவடிக்கைகளில் மேற்கொள்கிறது. சட்டப்பேரவையில் எந்தவொரு தீர்மானத்திற்கும் மத்திய அரசு மதிப்பதிப்பதில்லை என்பதற்கு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் தீர்மான அறிக்கை எங்கு உள்ளது என்பது தெரியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொன்னதை குறிப்பிட்டார். திராவிட அணியில் சேர மாட்டோம், அதிமுகவுடன் இணைந்தால் தாயோடு உடலுறவு என பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது முழுமையாக பதில் அளிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறு இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்றவர், மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதற்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள் என்றார்.

கடந்த ஆண்களில் திமுக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளதாகவும், நாங்கள் திமுக, காங்கிரசுடன் சேர மாட்டோம் என சொல்லவில்லை என்றவர், அந்தந்த மாநில சூழலை பொருத்து கூட்டணி என்ற அடிப்படையிலும், பேராபத்தான மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளதாக திமுகவுடனான கூட்டணிக்கு பதிலளித்தார். நாளை இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் அரசியல் எழுச்சி மாநாடு கோவையில் நடைபெறவுள்ளதாகவும், இதில், சிபிஐ மட்டுமின்றி தோழமை கட்சிகளான ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வீரமணி, வைகோ, திருமாவளவன், ஜவஹிருல்லா, பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றவர், திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளதாகவும், நாளை மறுநாள் நடக்கும் இரண்டாம் கட்ட பேச்கிவாரத்தைக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக எப்போதும் போராடுவோம் என்றும், காங்கிரஸ் சார்பில் பா.சிதம்பரம் உட்பட எந்த வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களை ஆதரித்து நாங்கள் வாக்கு சேகரிப்போம் என ஸ்டெர்லைட் ஆலையில் பா.சிதம்பரத்திற்கு பங்கிருப்பதாக கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், புல்வாமா தாக்குதலால் போர் நடந்தால் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யார் செய்தாலும் மிகப்பெரிய தவறு என்றவர், மோடி எந்த சாகசத்தை செய்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், மோடி தற்போது தேர்தலில் போட்டியிட தொகுதி தேடி அழைந்து கொண்டிருப்பதாகவும் சாடினார்.

மேலும் படிக்க