February 26, 2019
தண்டோரா குழு
ஆகாய வீரர்களே, அசகாய சூரர்களே, அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு
கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,
போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.