• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாச்சலம் முருகானந்தத்திற்கு என் வாழ்த்துக்கள் – ஸ்டாலின்

February 25, 2019 தண்டோரா குழு

தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாசலம் முருகாந்தத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. இதில் முருகானந்தமும் நடித்து இருந்தார். இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இந்நிலையில், 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருது பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் அருணாசலம் முருகாந்தத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற அருணாசலம் முருகாந்தத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஆஸ்கர் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தி. எளிய மக்கள், குறிப்பாக மகளிர் மீது அக்கறை கொண்டு செயலாற்றிய தமிழர் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கும், அந்தத் தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற படக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க