• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாசு கலங்கிய தண்ணீருடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 25, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலை கழிவுகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் , விவசாயிகளும் , பொதுமக்களும் , கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாசு கலங்கிய தண்ணீரை எடுத்து வந்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கோவையை அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து , நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் , அப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி , விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கழிவு நீர் கலங்கிய தண்ணீரை கால்நடைகள் குடித்ததால் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் நோய்யினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலங்கிய தண்ணீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க