• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 25, 2019 தண்டோரா குழு

முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை வட்டம் ஒக்கிலிபாளையம் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சங்க தலைவர் மற்றும் செயளாளர் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிம் பேசுகையில்,

பால் உற்பத்தியாளார் சங்கம் தினமும் 4500 லிட்டர் பாலை விவசாயிகளிடம் கொள்முதல் வருகிறது. லிட்டர் ஒன்றுக்கு இருபத்தி ஐந்து ரூபாய் வழங்கி வருகிறது. பால் ஒரு லிட்டருக்கு முப்பத்தைந்து ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் பினாமிகளை வைத்து பாலில் கலப்படம் செய்து 200 லிட்டர் வரை மோசடி செய்து பணம் சம்பதித்து வருவதாக குற்றம் சாட்டியவர்கள் இதனை ஆய்வு செய்ய சென்ற நிர்வாகிகளை அனுமதிக்காமல் வெளியேற்றபட்டதாக தெரிவித்தனர். வெளிப்படையான நடவடிக்கைகளை சங்க தலைவர் மற்றும் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க