February 25, 2019
தண்டோரா குழு
முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மதுக்கரை வட்டம் ஒக்கிலிபாளையம் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சங்க தலைவர் மற்றும் செயளாளர் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிம் பேசுகையில்,
பால் உற்பத்தியாளார் சங்கம் தினமும் 4500 லிட்டர் பாலை விவசாயிகளிடம் கொள்முதல் வருகிறது. லிட்டர் ஒன்றுக்கு இருபத்தி ஐந்து ரூபாய் வழங்கி வருகிறது. பால் ஒரு லிட்டருக்கு முப்பத்தைந்து ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் பினாமிகளை வைத்து பாலில் கலப்படம் செய்து 200 லிட்டர் வரை மோசடி செய்து பணம் சம்பதித்து வருவதாக குற்றம் சாட்டியவர்கள் இதனை ஆய்வு செய்ய சென்ற நிர்வாகிகளை அனுமதிக்காமல் வெளியேற்றபட்டதாக தெரிவித்தனர். வெளிப்படையான நடவடிக்கைகளை சங்க தலைவர் மற்றும் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.