February 25, 2019
தண்டோரா குழு
காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,
8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு எந்த ஒரு அரசு வேலையும் வழங்கப்படவில்லை மற்றும் எங்களுக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால் அதுவும் சரிவர கிடைக்கவில்லை எனவே இவைகளை முறைப்படுத்தி மாதம் ஆயிரம் ரூபாய் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியும் அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.