• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பியில் தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடு தேர்வை புறக்கணித்த 6 லட்சம் மாணவர்கள்

February 23, 2019 தண்டோரா குழு

உத்தரப்பிரதேசத்தின் பொதுத்தேர்வில் காப்பியடிப்பதில் இருந்து தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்தனர்.

அந்த மாநிலத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இந்நிலையில், இந்த தேர்வில் கடந்த ஆண்டுகளை போல் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சிசிடிவி மட்டும் பொருத்தியதால், தேர்வு கண்காணிப்பாளரே மாணவர்களுக்கு விடையைக் கூறி எழுத வைத்தது நடந்ததால் இந்த ஆண்டு சிசிடிவியுடன் உயர் திறன் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் பொருத்தப்பட்டு காப்பியடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பொதுத்தேர்வின் போது முறைகேடுகள் அதிக அளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க