February 23, 2019
தண்டோரா குழு
மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதைபோல் மற்றகட்சிளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.