February 23, 2019
தண்டோரா குழு
கோவை போலுவாம்பட்டி காப்புக்காட்டில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது
கோவையில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை இன்று வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.
கோவையை அடுத்த பெருமாள் கோவில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் சிறுத்தை ஓன்று பண்ணைகளில் புகுந்து ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து சாப்பிட்டு வந்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். ஜன.19ல் ஆடு மற்றும் கோழிகளை கொன்றதால் சிறுத்தையை பிடிக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அறிந்து வனத்துறையினர் அப்பகுதியில் 25 நாட்களுக்கு முன் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டை வைத்துள்ளனர். இதில் இன்று அதிகாலை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 6 வயது ஆண் சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.பிடிபட்ட சிறுத்தை தெங்குமரஹாடா கொண்டு செல்லப்படுகின்றன.