• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரபி மொழியில் கோசங்கள் எழுப்பி சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

February 22, 2019 தண்டோரா குழு

சூடான் நாட்டின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து சூடான் நாட்டு மாணவர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ள கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த நாடான சூடானின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து
கோவையில் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீர் ஈடுபட்டு வருவதாகவும், எனவே சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக கோரியும் கோசங்கள் எழுப்பினர். சூடான் நாட்டு கொடியுடன் அனைவரும் கூடி நின்று அரபி மொழியில் கோசங்கள் எழுப்பியதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க