• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும்

February 22, 2019 தண்டோரா குழு

தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷா, மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு விமானநிலையத்தில் அமித்ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன், விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,

அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி; தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என்றார்.

மேலும் படிக்க