February 21, 2019
தண்டோரா குழு
மும்பையை சேர்ந்த ஜஜடி இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய ரோபோட்டிஸ் செயல்மாதிரிகள் வடிவங்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.
கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில், மும்பையை சேர்ந்த இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் இறுதி போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாணவர்களின் பதினான்கு ரோபோட்டிக்ஸ் செயல்மாதிரிகளின் வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இன்று தொடங்கிய இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அறிவியல் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். சுமாராக, 70 மாணவர்களின் ரொபோடிக்ஸ் கண்டுபிடிப்புகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், ஐ.ஐ.டி மும்பையில் அவர்களது புதிய கண்டுபிடிப்பு செயல் வடிவத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து ஐயன்ட்ரா முதன்மை செயல் அலுவலர் டாக்டர். சசிகலா கூறுகையில்,
” இது மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்கும் முயற்சி. குறிப்பாக, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது, என்றார்.
இந்நிகழ்ச்சியின், தொடக்க விழாவில் கல்லூரி செயலர் கீதா பத்மநாபன், இயக்குனர் ராதாமணி, கணினி அறிவியல் துறை முதல்வர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.