• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சேர,சோழ,பாண்டிய நாட்டின் உணவு திருவிழா !

February 20, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு சாப்பாடு உணவு திருவிழாவில் சேர,சோழ,பாண்டிய நாட்டின் பழமையை நினைவு கூறும் வகையில் பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றுருந்தன.

கோவை விமான நிலையம் அருகில் உள்ள மேரியோட் குழுமத்தின் ஃபேர் பீல்டு ஓட்டலில் தமிழர் உணவுத் திருவிழா 2.0 நடைபெற்றது. இன்று துவங்கி 7 நாட்கள் நடைபெற உள்ள இதில் பழமையை போற்றும் பல்வேறு வகையான உணவு வகைகள் இடம்பெற்றன. ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சோமு தலைமையில், கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் தமிழகத்தின் கொங்கு,நெல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பிரபல உணவு வகைகள் இடம் பெற்றன.

அசைவ வகைகளில் ஆம்பூர் பிரியாணி, மட்டன் கோலா,சுறா மீன் புட்டு,,மதுரை நாட்டுக்கறி தோசை,விருது நகர் புரோட்டா செட்டிநாடு சிக்கன் மேலும் சைவ வகையில் தமிழர் உணவான கம்பு,ராகி,வாழைப்பூ வடை, மற்றும் மூலிகை ரசம் என தமிழர் உணவு வகைகள் இடம் பெற்றன. இனிப்பு வகைகளில் அதிரசம்,நிலக்கடலை உருண்டை,தேங்காய் பர்பி மற்றும் மதுரை ஜிகிர்தண்டா,நன்னாரி சர்பத் என தமிழர் உணவு பரிமாறப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டல் பொது மேலாளர் பரத்,

இந்த தமிழர் உணவு திருவிழா எங்களது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் நமது தமிழர் பண்பாட்டு உணவை ரசித்து சுவைப்பதாக கூறினார். இதில் தினசரி 70 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சேர,சோழ,பாண்டிய நாட்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க