• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் – தம்பிதுரை

February 20, 2019 தண்டோரா குழு

மத்திய அரசில் இதுவரை அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டுக் கொண்டே
இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும் என மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் பசுபதிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணைசபாநாயகா்
தம்பிதுரை,

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும். கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை மத்திய அரசில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டுக் கொண்டே இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும். இதுவரை மத்திய அரசு 20, 000 கோடி தமிழகத்திற்கு தரவேண்டி உள்ளது.

இனி 50,000 கோடி கூட கேட்டுப் பெற முடியும். அதிமுக பிஜேபி கூட்டணி குறித்து திருநாவுக்கரசு சொல்வதற்கு அவர் தற்போது எந்த பதவியிலும் இல்லை. திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பதவியை தற்போது திருநாவுக்கரசுக்கு போய்விட்டது அதனால் அவர் கூறும் கருத்தை தற்போது ஏற்க இயலாது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணப்படும்” ennஎன அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க