• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக தமிமுன் அன்சாரி அறிவிப்பு

February 19, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

மக்களைவை தேர்தலில் அதிமுக பாஜக இடையே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி 21 சட்டமன்ற இடைதேர்தலிலும் பாஜக அதிமுக ஆதரிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுடன் அமையும் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். சமூக நீதி, சமூக நல்லிணக்கம் , சமத்துவ ஜனநாயகம் என்பது எமது கொள்கையாகும். தமிழகத்தின் வாழ்வாதாரங்கள், தமிழர் உரிமைகள் , பின்தங்கிய சமூகங்களின் நலன்கள் ஆகியவற்றை முன்வைத்தே எமது அரசியல் தொடரும். மனிதநேய ஜனநாயக கட்சியின் அடுத்தக் கட்ட அரசியல் நிலைபாடு ,குறித்து எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று சென்னையில் கூடும் தலைமை நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க