• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

February 16, 2019 தண்டோரா குழு

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது வெடிமருந்து நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவன் மோத செய்தான். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில், தமிழக வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களது உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, செளந்தரராஜன் திருச்சி, அரியலூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து சிவசந்திரனின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

அதைப்போல்,தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உடல் இன்று சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அவரது உடலுக்கு
ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும்,
பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வீரர் சுப்பிரமணியனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க