• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுக பேனரை கிழித்த டிராபிக் ராமசாமி

February 16, 2019 தண்டோரா குழு

கோவையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 3 பேனர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எறிந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, 3 பேனர்களை கிழித்து ஏறிந்தார். நாளை கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனரை கிழிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பேனரை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் உடனடியாக பேனரை அகற்ற கோரி பேனர் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். பேனரை அகற்றும் வரை அவ்விடத்தில் இருந்து செல்ல போவதில்லை எனவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

காவல் துறையினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து பேனர் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க