• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் – ஓபிஎஸ்

February 15, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் கூட்டணி இறுதி செய்யப்படும். மக்களவை தேர்தலில் போட்டியிட சுமார் 2000 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் விரைவில் துவங்கும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் நலனுக்காக மக்கள்நல திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான். எனவே, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெரும். பாஜக -அதிமுக கூட்டணி அமையுமா? என்பது குறித்து பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரைவில் கூட்டணி குறித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க