• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் சீசன் என்பதால் நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக ஸ்டாலின் ஆதரவு – பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

February 14, 2019 தண்டோரா குழு

வளம் இருப்பதால் தமிழகத்திற்கு வரும் ஆஸ்திரேலிய பறவைகள் போல் தேர்தல் சீசன் என்பதால் நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக ஸ்டாலின் ஆதரவு அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

நாராயணசாமியின் போராட்டம் தேர்தல் வருவதற்கான அறிகுறி, தேர்தல் நேரத்தில் இதுபோல் விஷயங்கள் நடக்கும். தமிழ்நாடு முக்கியமான மையமாக இருப்பதாக பாஜக நினைக்கிறது. மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை இந்த பகுதியில் இருக்ககூடிய நண்பர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்றார்.

மேலும், தம்பிதுரை தனது நெருங்கிய சகோதரர் என்றும், அவருடன் தினமும் பேசி வருவதாக தெரிவித்தார். பாஜகவிற்கு கூட்டணி சம்மந்தமாக எந்த பிரச்னையும், யாருடனும் கிடையாது. பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சொன்னால் சரியாக இருக்கும் என கூட்டணி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என முரளீதர ராவ் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் படிக்க