• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முல்லை பெரியாரில் புதிய அணை ஏதும் கட்டவில்லைஉச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமான பத்திரம் தாக்கல்

February 11, 2019 தண்டோரா குழு

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக தமிழக அரசு கூறியது, மேலும் தமிழக அரசு கேரளா அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடர்ந்தது. தமிழக அரசு தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும், மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கேரள அரசின் பதிலை ஏற்ற உச்ச நீதிமன்றம் தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது.

மேலும் படிக்க