• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சானி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

February 11, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சானி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி சேர்ந்தவர் மகேஸ்வரி(43). அவருடைய கணவருக்கு உடல் செயல் இழந்த நிலையில் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்தை கோவையை சார்ந்த சாக்ரடீஸ்,பூபதி கண்ணன் என்ற வழக்கறிஞர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மகேஸ்வரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வந்திருந்தபோது சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடனிருந்த மகள் கதறியதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க